இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போறது இவரா.? ஷாக்கான ரசிகர்கள்.

தமிழில் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இதனை சீரும் சிறப்புமாக வழக்கம் போல் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாண்டு வருகின்றன. தற்போது போட்டியாளர்கள் இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்த வண்ணமே உள்ளன. நேற்று தீபாவளியை முன்னிட்டு சில சிறப்பு நிகழ்ச்சிகளும் பிக்பாஸ் வீட்டினுள் நடந்தன.

அதில் சூப்பர் சிங்கர் மானசி, மாகாபா,மதுரை முத்து போன்றவர்களும் நிகழ்சியில் கலந்து கொண்டனர் . ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவரவர் வீட்டிலிருந்து உணவு, கடிதம் மற்றும் சில புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருந்தனர். அவற்றை பார்த்த சந்தோஷத்தில் சில போட்டியாளர்கள் கண் கலங்கி அழுதனர்.

இந்தத் எபிசோடு நேற்று நான்கு மணி நேரம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற வாரம்  சின்னப்பொண்ணு வெளியேறி இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் அபிநய், அக்ஷரா, சிபி, இசைவாணி, மதுமிதா, பாவனி ரெட்டி, சுருதி உள்ளிடோர் நாமினேட் செய்யபட்டு இருந்தனர்.

இவர்களில் குறைந்த வாக்குகளுடன் அபினை மற்றும் சுருதி கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர் . ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற அதிகம் வாய்ப்புகள் உள்ளது. என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment