முதல் நாள் வசூலில் யார் ஜெயித்தது.? அண்ணனா? தம்பியா.?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது  வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றவரும் நிலையில் தற்போது வாத்தி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதாவது தனுஷின் வாத்தி திரைப்படம் ஒரு நாள் முடிவில் உலகமுழுவதும் 14 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து வாத்தி திரைப்படத்துடன் தனுஷின் அண்ணன் செல்வராகவன் திரைப்படமான பகாசூரன் நேற்று வெளியாகியிருக்கின்றது. அந்த வகையில் அண்ணன் தம்பியும் முதன் முறையாக திரையில் மோதி கொண்ட நிலையில் இந்த இரண்டு படத்திற்காக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

அதிலும் குறிப்பாக பகாசுரன் திரைப்படத்தை விட வாத்தி திரைப்படம் தான் அதிக எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது ஆனால் பாகாசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வந்தது.

இருந்தாலும் வாத்தி திரைப்படத்தை விட பாகாசுரன் திரைப்படம் அடிபணிந்தது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு ஒரு சருக்களை சந்தித்து இருக்கிறது. அதாவது வாத்தி திரைப்படம் வெளியாகி ஒருநாள் முடிவில் உலக அளவில் 14 கோடி வசூலித்த நிலையில் பகாசுரன் திரைப்படம் வெறும் 1.5 கோடி மட்டும் தான் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் அண்ணன் தம்பி இடம் தோற்று போனதாக கூறப்படுகிறது. ஆனால் இது முதல் நாள் வசூல் மட்டும் தான் இப்படி இருக்கும் போக போக யார் வெற்றியடைகிறார் என்று பார்ப்போம் என்று செல்வராகவனின் ரசிகர்கள் கூறிய வருகிறார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ஹிட் அடித்த நிலையில் அவர் நடித்தால் எப்படி இருக்கும் என்று பலரும் காத்திருந்தனர். அந்த வகையில் உருவான பகாசுரன் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் அடுத்த அடுத்த நாட்களில் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version