“பிரேமம்” படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? கடைசியாகத் தான் சாய்பல்லவி.

திறமை இருப்பவர்கள் ஓவர் நைட்டில் கூட பிரபலம் அடைந்து விட முடியும் அந்த வகையில் ஒரே ஒரு படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

பிரேமம் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் சென்டிமெண்ட் படமாக உருவாகி இருந்தது இந்த படம் 2015ம் ஆண்டு வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாய் பல்லவி உடன் இணைந்து மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரி, நிவின் பாலி மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தில் சாய் பல்லவி  டீச்சர் கதாபாத்திரத்தில் செம அழகாக நடித்து பிரபலமடைந்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது வளர்ச்சியை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட நடிகை சாய் பல்லவி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உள்ளதாக ஒரு தகவல்கள் கூறப்படுகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் பிரேமம் படத்தில் சாய்பல்லவி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இவர் இல்லை எனவும் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க அல்போன்ஸ் புத்திரன் தேடினார்.

asin
asin

அந்த நடிகை வேறு யாருமல்ல அசின் தான் முதலில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது ஆனால் சில காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே பின் சாய்பல்லவி நடித்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment