குஷ்பூ கன்னத்தில் அறைந்தது யார்.? இணையத்தில் மிகவேகமாக வைரலாகி வரும் புகைப்படம்.!

80,90ன் காலத்தில் கொடிகட்டி பறந்து வந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை குஷ்பூ இவர் அந்தக் காலத்தில் நடிக்காத திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு ரஜினி,கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது குடும்ப கதாபாத்திரங்களுக்கு ஏற்ப ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பொழுது இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வந்தார்கள்.

என்னதான் ஒரு நடிகை மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் பட வாய்ப்பு இல்லை என்றால் உடனே கீழே விழுந்து விடுவார்கள் அதுபோலத்தான் குஷ்பூவும் படவாய்ப்பு இல்லாமல் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் தற்பொழுது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் குஷ்பூ எப்போதுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான்.

அந்த வகையில் தற்பொழுது குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளாராம் அந்த புகைப்படத்தில் குஷ்பூ கண்ணத்தில் யாரோ அடித்தது போல் தெரிகிறது மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களை யார் அடித்தது என கேட்டு வருவது மட்டுமல்லாமல் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் புதிதாக ஒரு சீரியலில் நடிப்பது எங்களுக்கு தெரியாது என்று நினைத்தீர்களா என கேட்டு வருகிறார்கள்.

kushboo
kushboo

ஆம் குஷ்பூ தற்பொழுது மீரா என்ற ஒரு சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலின் கதையைக் கூட இவரேதான் எழுதி வருவதாகவும் கூறுகிறார்கள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என குஷ்பூ நம்புகிறார்.

Leave a Comment