பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியே போக போறது யார் தெரியுமா.? வெளியான ரிப்போர்ட்.?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 சென்ற மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு தற்போது 5 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் ஐந்து நாட்களில் நடந்த பிரச்சனைகள் குறித்து  இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கமலஹாசன் போட்டியாளர்கள் இடையே விவாதித்து வருவார்.

மேலும் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஒரு நபர் வெளியேற்றப்படுவார்.அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் இருப்பவர்கள் அக்ஷரா, ராஜி ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, அபிநய், சிபி, மதுமிதா  போன்றவர்கள் உள்ளனர்.

இதில் ராஜி பெரும்பாலும் தேவையில்லாத விவாதத்தில் ஈடுபட மாட்டார் மற்றும் மற்ற போட்டியாளர்கள் இடம் வீண் சண்டையும் போட மாட்டார். எனவே மக்கள் பலருக்கும் ராஜீவை மிகவும் பிடிக்கும். அதனால் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மக்களிடமிருந்து அதிக வாக்குகளை பெற்று ராஜி முதலிடத்தில் உள்ளார். மேலும் அதைத் தொடர்ந்து அக்ஷரா, சிபி, அபிநய் போன்றோர் உள்ளனர்.

மேலும் தற்பொழுது இமான் அண்ணாச்சி மற்றும் மதுமிதா நிலைமை தான் கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஆரம்பத்தில் இமான் அண்ணாச்சியை மக்கள் பலருக்கும் பிடிக்கும் ஆனால் தற்போது அவர் செய்யும் செயல் சரியில்லாதது போல் தெரிகிறது.ஏனென்றால் அவருடன் வயதில் சிறியவர்கள் ஒரு சிலர் சொன்னால் அவர்  கேட்டுக் கொள்வதில்லை.

மேலும் இசை வாணிக்கும் இவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் வந்த வண்ணமே உள்ளன. தற்போது மதுமிதா மக்களின் பார்வையில் தென்படும் அளவிற்கு ஏதும் செய்யவில்லை. இவர் இதுவரையிலும் மக்களிடையே பெரிதாக ரீச் அடையவில்லை. ஆகையால் இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்.

big boss
big boss
bigg boss
bigg boss

Leave a Comment