வசூல் கிங் யார்.? 3 வார முடிவில் அதிக வசூல் செய்த திரைப்படம் எது தெரியுமா.?

பண்டிகை நாட்களில் டாப் ஹீரோக்களின் படங்கள் களம் இறங்குவது வழக்கம் அந்த வகையில் இந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் ரிலீஸ் ஆகியன. இரண்டு படத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர் வெளிவந்து அதை சரியாக பூர்த்தி செய்து உள்ளது .

அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் கொண்டாடினர். இதே போல விஜயின் வாரிசு படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்ததால் தற்பொழுதும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இருப்பினும் வசூல் ரீதியாக விஜயின் வாரிசு வெற்றி பெற்றதா அஜித்தின் துணிவு வெற்றி பெற்றதா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் மீடியா உலகமும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது அதனால் ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில்..

மூன்று வார முடிவில் இரண்டு திரைப்படங்களும் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில்.. மூன்று வார முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் ஒட்டு மொத்தமாக  230 கோடி வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது

விஜயின் வாரிசு திரைப்படம் ஒட்டு மொத்தமாக 280 கோடி வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது இதன் மூலம் 50 கோடி அதிகம் வசூலித்து மூன்று வார முடிவில் விஜய் கிங் என நிரூபித்துள்ளார். ஆனால் வருகின்ற நாட்களில் இதில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..

Leave a Comment