இன்று பிக்பாஸ் 5 வீட்டில் இருந்து வெளியேற போற போட்டியாளர் இவரா.? கசிந்த தகவல்.

உலக நாயகன் கமலஹாசன் வெள்ளித்திரையும் தாண்டி சின்னத்திரையிலும் தற்போது கால் தடம் பதித்து பயணித்து வருகிறார் அந்த வகையில் விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 5வது கட்ட சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த சீசனையும் கமல் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்.

முதல் வாரம் தற்போது முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேறி இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். பிக்பாஸ் வீட்டில் 18 பேர்கள் கலந்து கொண்ட இந்த நிலையில் சில காரணங்களால் திருநங்கை நமீதா மாரிமுத்து வெளியேறினார்.

அவரை தொடர்ந்து 17 போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர்.  இந்த வாரத்திலேயே பிக்பாஸ் நாமினேஷன் தொடங்கியது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மக்கள் மனதை வென்ற நிலையிலும் நாமினேட் ஆனவர்கள் அந்த வகையில் பிரியங்கா நீரும் ராஜீவ் அபிஷேக் அக்ஷரா இமான் அண்ணாச்சி உள்ளிட்ட 15 போட்டியாளர்கள் நாமினேட் ஆனவர்கள்.

ஆனால் நேற்று ஒரு சிலர் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று பிக் பாஸ் சீசன் 5 இல் வீட்டிலிருந்து வெளியேற போவது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு மக்களை கவராமல் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு இருந்த நாதியா சாங் என்பவர் தான்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற  போட்டியாளர் என்ற தகவல் வெளியாகி உள்ளது ஆம் இன்று நடக்க உள்ள எபிசோடில் அவர் நிச்சயம் வெளியே போவார் அடித்துக் கூறுகின்றனர்.

naathiya chang
naathiya chang

Leave a Comment