உங்களை முதலில் அப்படி பார்த்தது யார்.? தேவையில்லாத கேள்வியை கேட்ட ரசிகர் – அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்ன யாஷிகா.!

yashika
yashika

மாடலிங் துறையில் இருந்து பின் வெள்ளித்திரையில் கால் தடம் பதிபோரின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் யாஷிகா ஆனந்த். முதலில் இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோயினாக மாறி உள்ளார்.

முதலில் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தாலும் ஹீரோயின்னாக நடித்தார். அதன் பின் யாஷிகாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது.

யாஷிகா ஹீரோயின் என்ற அந்தஸ்தைப் பெற்று இருந்தாலும் ரசிகர்களை பெரும் அளவில் உயர்த்திக் கொள்ள தொடர்ந்து ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசினார் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் படங்களிலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி நீங்கள் அதிகமாக கவர்ச்சியை தான் காட்டுகிறீர்கள் என கூற..

ஒரு கட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்த சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்தார். அந்த வகையில் கடமையை செய், இவன்தான் உத்தமன், சல்பர், bestie மற்றும் பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ளார் இருப்பினும் எந்த ஒரு திரைப்படமும் வெளிவராமல் இருப்பதால் ரசிகர்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து  புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

மேலும் ரசிகர்களுடன் அவ்வப்பொழுது உரையாடுவது வழக்கம் அதுபோல இப்போ ரசிகர் ஒருவர் தேவையில்லாத கேள்வியை கேட்டுள்ளார். உங்களை முதன் முதலில் அப்படி பார்த்த அதிர்ஷ்டசாலி யார் என கேட்டுள்ளார் அதற்கு யாஷிகா டாக்டர் தான் என அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தார். இந்த மாதிரி ஏடாகூடமான கேள்விகளுக்கு உணர்ச்சிவசப்படாமல் தனது பாணியில் அவர் பதிலடி கொடுத்தார். இதனை அறிந்த ரசிகர்கள் செம்ம எனக் கூறி யாஷிகாவை பாராட்டி வருகின்றனர்.