யாரைப் போய் கெஸ்ட் ரோலில் நடிக்க சொல்றீங்க.. நான் யார் தெரியுமா.? கொந்தளித்த விஜய் உண்மையை உடைத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர்  லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் படும் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து அர்ஜுன், திரிஷா..

மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்து காணப்படுகிறது. தளபதி விஜய் தொடர்ந்து ஹீரோவாக ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் ஆரம்ப காலகட்டத்தில் கெஸ்ட் ரோல்களில் நடித்து கைத்தட்டல் வாங்கியுள்ளார் என்பது நாம் அறிந்து வரும் அறிந்த ஒன்றுதான். இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், டிஎஸ்பி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பொன்ராம்.. தளபதி விஜய் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை சொல்லி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

சுக்கிரன் திரைப்படத்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கினார் அந்த படத்தில் உதவி இயக்குனராக பொன்ராம் வேலை பார்த்தாராம்.. அப்பொழுது ஷூட்டிங்கு வந்த விஜய் உதவி இயக்குனர்களை எல்லாம் பார்த்து என்ன செய்கிறீர்கள் என கேட்டாராம் அவர்களும் கதை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என கூறி இருக்கின்றனர்.

பிறகு விஜய் “நான் எப்பேர்பட்ட ஆளு என்னை போய் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து விட்டீர்களே” என்று கூறினாராம் அதற்கு பொன்ராம் சார்  கதைக்கு  தேவைப்பட்டதால் தான் இப்படி என்று சொல்ல அதற்கு விஜய் சரி வெயிட்டான ரோல் தானே என கேட்டு ஒரு கன்பார்ம் பண்ணிக்கொண்டாராம்.. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Leave a Comment