ரஜினியின் அடுத்த பட சூட்டிங்.. எந்த இடத்தில் நடக்க போகிறது தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

ரஜினிக்கு கதை கூற அந்த கதை ரஜினிக்கு பிடித்து போக தனது 169 வது படத்தில் கமிட்டானார். நெல்சன் இதற்கு முன் விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்ததால் அடுத்து ரஜினியை வைத்து இயக்க உள்ள படம் சிறப்பாக அமைய வேண்டுமென..

கதையை தீவிரமாக உருவாக்கி வருகின்ற நிலையில் மறு பக்கம் படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்ப மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறது படக்குழு. அந்தவகையில் தலைவர் 169 ஆவது படத்தில் ரஜினியுடன் இணைந்து ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய், மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார்  நடிக்க உள்ளார்.

இவர்களை அடுத்து ரஜினியின் மகளாக பிரியங்கா அருள் மோகனும் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு தொடங்க இருக்கிறது. அதனால் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகளிடம் மூன்று மாதங்களுக்கு கால்ஷீட் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அந்த நடிகர் நடிகைகள் மூன்று மாதத்திற்குள் வேறு படத்தில் நடித்து வந்தாலும் இந்தப் படத்திற்கான அழைப்பு வந்தால் உடனடியாக படத்தில் இணைய வேண்டும் என கால்ஷீட் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment