பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் இருந்து முதலில் வெளியே போகபோறது.? இந்த இரண்டு பேரில் யாரோ ஒருவர் தான்.?

உலகநாயகன் கமலஹாசன் சின்னத்திரையில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து நான்கு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த இவர் தற்போது ஐந்தாவது சீசனையும் சீரும் சிறப்புமாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி நடத்திக் கொண்டு வருகிறார்.

இதுவரை நடந்த நான்கு சீசன்களில் முதலில் 16 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் இந்த சீசனில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவரான நமிதா மாரிமுத்து சில காரணங்களால் வெளியேறினார்.முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால் போட்டியாளர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.

இரண்டாவது வார தொடக்கத்தில் தலைவருக்கான போட்டி நடந்தது அதில் தாமரைச்செல்வி வெற்றிபெற்று இந்த வார தலைவராக இருக்கின்றார்.இந்த நிகழ்ச்சியில் பெரிதாகப் பேசும் அளவிற்கு இன்னும் பிரச்சனை ஏதும் நடக்கவில்லை. ஆனால் போகப்போக சூடு பறக்க பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வார நாமினேஷன் இல் பவானி ரெட்டி மற்றும் விட்டின் தலைவரான தாமரைச்செல்வியை தவிர மீதமுள்ள 15 நபர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.அந்த 15 நபர்களின் இந்த வாரம் யார் வெளிவார் என்ற குழப்பம் மக்கள் அனைவர் மனதிலும் இருந்து வருகிறது.

தற்போது வெளி வந்துள்ள தகவலின்படி குறைந்த வாக்குகளில் அபிநய், சுருதி, சின்னபொண்ணு மற்றும் அபிஷேக் ஆகியோர் இருக்கின்றனர்இவர்களில் சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக்  ஆகியோர் வெளியேற அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷன் இந்த வாரம் என்பதால் மக்கள் அனைவரும் மிகவும் விறுவிறுப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment