விஜய் அடி வாங்கிய போது நான் தடுத்தேன்.. எனக்காக அவர் வரல.. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வரும் விஜய். இவர் தற்போது லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து  லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படம் பக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. லியோ படத்தில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட உள்ளது. இப்படி திரை உலகில் பிஸியாக ஓடும் விஜயை ஆரம்பத்தில் தூக்கி விட்டது அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான்.. அவருடன் தற்போது சரியாக பேசுவதில்லை, பாசம் காட்டுவதில்லை என ஒரு தகவல் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் விஜய்க்கும், அவரது அப்பாவுக்கும் உள்ள உறவைப் பற்றி பேசியுள்ளார். விஜயின் ஆரம்பகால படங்களில் பொன்னம்பலம் அதிகம் நடித்திருக்கிறார்.   எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் சின்ன சின்ன தவறுகள் அவர் செய்வார்.  அது எஸ், ஏ. சந்திரசேகருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.. ஒரு கட்டத்தில் விஜய்யை கன்னத்தில் அடித்து விட்டார்  இதைப் பார்த்துக் கொண்டிருந்த பொன்னம்பலம் ஓடிப்போய்..  என்ன சார் பொது இடத்தில் இப்படி அடிக்கலாமா அதுவும் இப்பொழுது விஜய் உங்கள் மகன் அல்ல..

இந்த படத்தின் ஹீரோ என நடிகர் விஜய்க்கு வக்காலத்து  வாங்கினாராம்.. இப்படி விஜய்க்காக குரல் கொடுத்த எனக்கு இப்பொழுது உடல் நிலை சரியில்லாமல் இருப்பது எல்லோருக்கும் ஆனால் நடிகர் விஜய் நலம் விசாரி திருக்கலாம் ஆனால் இதுவரை ஒன்றும் கேட்கவில்லை என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

Leave a Comment