நடிகர் சிம்புவிற்கு எப்போது திருமணம்.! இதோ அவருடைய அம்மா உஷா ராஜேந்திரன் சொன்ன தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவ்வாறு தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் பத்து தல திரைப்படம் வெளியான ஒரு சில வாரங்களில் சிம்பு திருமணம் செய்ய போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படத்தை பார்க்க நேற்று அவருடைய அம்மா உஷா ராஜேந்திரன் திரையரங்கிற்கு வந்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள் உஷா ராஜேந்திரன் அவர்களிடம் படத்தைப் பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர் அதன் பிறகு நடிகர் சிம்புவின் திருமணம் எப்போது என கேள்வியாக எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த உஷா ராஜேந்தர் தற்போது தன்னுடைய மகன் சிம்புவிற்கு 39 வயது ஆகிறது திருமணம் என்ற கேள்வி தான் எல்லோராலும் கேட்கப்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் சமீப காலங்களாக சிம்புவின் திருமண தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆகையால் சிம்புவின் திருமணத்தை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் சிம்பு எங்கு சென்றாலும் அவருடைய பெற்றோர்கள் எங்கு சென்றாலும் அவர்களிடம் சிம்புவின் எப்போது என பல கேள்விகள் ரசிகர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சிம்புவின் அம்மாவான உஷா ராஜேந்திரன் அவர்கள் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என கூறியிருக்கிறார். இவர் இந்த செய்தியை சொன்ன உடனே சிம்பு ரசிகர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுக்கும் என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் பத்து தல திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தப் படத்தில் எழுத்தாளர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக மறைமுகமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சிம்புவின் தாயார் இவ்வாறு சொன்னது பெரிய அளவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment