பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு நாள் இருந்து என்ன பிரயோஜனம் – பாதி கடனை மட்டும் தான் அடைக்க முடிக்கும் வருத்தப்பட்ட தாமரை.! உண்மை சொன்ன போட்டியாளர்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகச்சிறந்த நிகழ்ச்சி பிக்பாஸ் இது மக்கள் மற்றும் ரசிகர்கள் இதை ஒரு சீசன்னாக தான் பார்த்தாலும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அவர்களது வாழ்க்கையை மாற்றியமைக்கும் என நம்பித்தான் கலந்துகொள்கின்றனர்.

திறமை இருப்பவர்கள் இந்த போட்டிகளின் மூலம் 100 நாட்களில் தனது திறமை மற்றும் எல்லாவற்றையும் வெழிகாட்டி  மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடிக்கின்றனர் இதன் மூலம் வெளியே வரும் அவர்களுக்கு சினிமா துறையில் வாய்ப்புகள் கிடைக்கின்றன நான்கு சீசன்கள் அப்படித்தான் திறமை இருந்தவர்கள் இந்த போட்டியின் மூலம் பங்கு பெற்று வெளியே சென்ற பட வாய்ப்பை அள்ளி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர்.

அதேபோல ஐந்தாவது சீசனிலும் பல பிரபலங்கள் இருக்கின்றனர் அவர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதிலும் குறிப்பாக பிக் பாஸ் சீசன் 5 – ல் நாடக கலைஞராக எங்கேயோ ஒரு மூலையில் பயணித்த தாமரைச்செல்வி இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது தாமரைச்செல்வியும் ஆரம்பத்தில்  விவரம் தெரியாததால் பிக்பாஸ் எப்படிப்பட்டது.

என்பதை உணர்ந்து கொள்ள சில நாட்கள் ஆனது ஆனால் போகப் போக மற்ற போட்டியாளர்களின் மனநிலைமை போட்டிகள் எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டு விளையாட 95 ரன்களுக்கு மேல் பயணித்து அசத்தினார் மேலும் இறுதிவரை போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுக்களை வாங்கி வெளியேறினார் இருப்பினும் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என தெரியவந்துள்ளது.

ஒரே ஒரு சின்ன வருத்தம் தான் ரசிகர்கள் மனதில் தாமரைச்செல்விக்கு நிறைய கடன்கள் இருக்கிறது என அவரே கூறியுள்ளார் அப்படியிருக்கும் போது வந்த பணப்பெட்டியை அதாவது 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியேறி இருக்கலாம் அதை விட்டுவிட்டார் அது மிகப்பெரிய ஒரு வருத்தமான செய்தி இப்பொழுது சும்மா கையை வீசி விட்டு போறத விட அந்த பணத்தை எடுத்து இருந்தால் நல்ல விஷயம் என கூறிவருகின்றனர்.

இதை தாமரையே ஒரு தடவை பேசி உள்ளாராம் அதாவது பிக்பாஸ் வீட்டில் கொடுக்கின்ற காசை வைத்து பாதி கடனை அடைத்து விடுவேன் மீதி கடனுக்காக நான் வெளியே சென்று தன் சம்பாதிக்க வேண்டும் என கூறியுள்ளார் இதனை பிரியங்கா தாமரைச்செல்வி சொல்லியதாக கூறினார்

Leave a Comment