என்ன படம் எடுத்து இருக்காரு பெரியப்பா.? கேவலமா இருக்கு என செல்வராகவனை காரி துப்பிய தனுஷ் மகன்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் பல திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்திலேயே உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு தனித்துவமான கதையை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் இல்லையென்றால் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் போல ஒரு நடிகர் வந்திருக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். தனுஷை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் செல்வராகவன். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்தார். அதன் பிறகு செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக் காகிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் நடிகர் செல்வராகவன். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் அவர்கள் ஒரு பேட்டி அளித்துள்ளார் இந்த பேட்டி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது அந்த பேட்டியில் உங்களுடைய படத்தை பார்த்து லிங்கா மற்றும் யாத்திரா என்ன சொல்வார்கள் என்று கேட்டிருக்கிறார் அதற்கு பதில் அளித்த செல்வராகவன் அவர்கள் தான் இருப்பதிலேயே மிக மோசமான விமர்சகர்கள் இவர்கள் தான் என்று கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் படம் நல்லா இருக்கோ இல்லையோ என்ன பெரியப்பா இப்படி எடுத்து வச்சிரீக்கிங்க என்று காரி துப்பி விடுவார்கள் என்று அந்த பேட்டியில் செல்வராகவன் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

Leave a Comment