சிவகார்த்திகேயன் எழுதிய “அரபி குத்து” பாடலை பற்றி மன்சூர் அலிகான் – சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் அண்மை காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் என்டர்டைன்மென்ட் படங்கள் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அசத்துகின்றன.

மேலும் அந்த படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன அந்த வகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் டான் ஆகிய படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்தன. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கையில் அயாலன், பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.

இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் சிவகார்த்திகேயன் சினிமா பயணம் உச்சத்தை தொடும் என தெரிய வருகிறது மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன

இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் காமெடி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர் மன்சூர் அலிகான் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார். அது குறித்து பார்ப்போம். இப்பொழுது இருக்கும் ரசிகர்களும் மக்களும் சின்ன படங்களை பார்ப்பதில்லை..

பெரிய நடிகரின் படங்களை பார்க்கவே அதிகம் ஆசைப்படுகின்றனர். அதிகம் பணத்தை சம்பாதித்து வைத்துக் கொண்டு அஜித் படம் வருமா.. விஜய் படம் வருமா.. என காத்துக் கொண்டிருக்கின்றனர் இவர்கள் இருவரையும் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் எகிப்து, சோமாலியா பக்கம் ஊர் சுற்றி விட்டு வந்து “மலமா பித்தா பித்தாதே” கண்டுபிடிச்சு போட்டு இருக்கான். பாட்டுல பி ஹெச் டி பண்ணி இருப்பான் போல.. சொத்தை எல்லாம் வித்துட்டு தான் அவரிடம் போகணும் போல.. அந்த அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்டாரு.. என மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

Leave a Comment