நடிகை குஷ்பு திடீரென நடிகர் பிரபு வீட்டுக்கு விசிட் அடிக்க காரணம் என்ன.! வைரல் புகைப்படம் இதோ.

90 காலகட்டங்களில் தனது அழகான நடிப்பின் மூலம் இளசுகள் மனதில் வெகுவாக குடியேறியவர் நடிகை குஷ்பு.

அன்றிலிருந்து இன்று வரையிலும் அவர் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது சினிமாவில் பெரிதும் நடிக்காவிட்டாலும் தன்னை நம்பி வருகின்றனர் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் சமீப காலமாக அரசியலிலும் ஈடுபட்டுவருகிறார் அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு சமீபத்தில் அதிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்தார்.

தற்பொழுது நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் காண்கிறார் குஷ்பு.

சில தினங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு தற்போது தனது பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளார்.

முதல் தேர்தல் காலம் என்பதால் குஷ்பூ அதிரடியாக தனது தொகுதியில் களம் இறங்கி வெற்றியை கனியை பார்க்க முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு திடீரென மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு  சென்றார். அங்கே சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர்களை நேரில் சந்தித்தார்.

மேலும் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் சமீபத்தில் பாஜக கட்சியில் இணைந்தார் அவரை பார்த்துவிட்டு குடும்பத்துடன் ஆசி பெற்றார்.

எல்லோரையும் ஒன்று கூட்டி மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் படத்திற்கு முன் நின்று அனைவரும் எடுத்துக் கொண்டனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகிறது.

Leave a Comment