சூர்யாவை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.. நிருபரின் கேள்விக்கு தனது ஸ்டைலில் பதில் சொன்ன சந்தானம்.!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமா உலகில் காமெடியனாக அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், சிம்பு, ஜீவா போன்ற டாப் நடிகர்களிடம் படங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் இவர் ஹீரோவாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் காமெடி கலந்த படங்களாக இருந்ததால் போட்ட காசையும் தாண்டி ஓரளவு லாபத்தை பார்த்து வருகின்றன. இதனால் சந்தானத்திற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

தற்போது கூட நடிகர் சந்தானம் குளு குளு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவி நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்கிறது. குளு குளு படக்குழு செய்தியாளர்களை சென்னையில் சில தினங்களுக்கு முன்பு சந்தித்தது அப்பொழுது சந்தோஷ நாராயணன், சந்தானம், உதயநிதி ஸ்டாலின், ரத்தினகுமார் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்பொழுது படம் குறித்தும் சினிமா குறித்தும் சில விஷயங்களை பேசினார் ஒரு கட்டத்தில் சந்தானத்திடம் சூர்யா தேசிய விருது வாங்கி உள்ளார் அது குறித்து உங்கள் கருத்து என்ன என ஒரு நிருபர் கேட்க சந்தானம் உடனே கடுப்பாகி யார் தேசிய விருது வாங்கினா எனக்கென்ன இது குளு குளு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இந்த படத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள்.

இந்த படம் குறித்து ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறோம் அதை விட்டுவிட்டு ஏன் இப்படி எல்லாம் கேட்கிறீர்கள் என கோபப்பட்டு பேசினார் சந்தானம் இப்படி பேசியது சூர்யா ரசிகர்களை சற்று கடுப்பு ஏத்தி உள்ளது. மேலும் நடிகர் சந்தானம் பேசிய செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment