உனக்கு மியூசிக்கை பத்தி என்ன தெரியும்..? மேடையில் நடிகர் பார்த்திபனை அவமானப்படுத்திய இளையராஜா..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை  கவர்ந்தவர் தான்  இளையராஜா இவ்வாறு பிரபலமான நமது  இசைக் கலைஞர் எந்த அளவிற்கு பிரபலமானரோ அந்த அளவிற்கு பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் கூட பொது நிகழ்ச்சிகளில் தன்னுடைய பாடலை யாரும் தன்னுடைய அனுமதியின்றி பாடக்கூடாது அப்படி மீறி பாடினால் அதற்கு உரிய ராயல்டி தர வேண்டுமென பெரும் சர்ச்சையை உருவாக்கி இருந்தார் மேலும் எஸ்பி பாலசுப்பிரமணியன் கூட பொது நிகழ்ச்சிகள் படக்கூடாது என  இளையராஜா கண்டித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

அந்த வகையில் இளையராஜா பொது நிகழ்ச்சியில் பலரிடமும் கடுமையாக நடந்துகொள்வது வழக்கம் தான் அந்த வகையில் சில ஆண்டிற்கு முன்பாக மேடையில் தண்ணீர் எடுத்துச் சென்ற பாதுகாவலர் ஒருவரை இளையராஜா மிகக் கடுமையாக திட்டி தீர்த்துள்ளார். அந்த பாதுகாவலரை பிறகு இளையராஜாவின் காலில் விழுந்தார்.

அந்த வகையில் இளையராஜா 75ஆவது விழாவில் ஷங்கர் மற்றும் விக்ரம் ஆகியோர்கள் மேடையில் இருந்தார்கள் அப்பொழுது ரோகிணி இளையராஜாவிடம் நீங்கள் எப்போது சங்கருடன் பணியாற்றுவீர்கள் என்று கேள்வி எழுப்பிய வேலையில் நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்களா என காட்டமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனை தொடர்ந்து விருது விழா ஒன்றில் இளையராஜாவிடம் பார்த்திபன் அவர்கள் வயலினை கொடுத்துவாசிக்க கேட்ட பொழுது உனக்கு மியூசிக்கை பத்தி என்ன தெரியும் என இளையராஜா கேட்ட வீடியோவானது என்றும் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது அதற்கு தகுந்தார்போல் பார்த்திபனும் சரியான பதிலை கொடுத்துள்ளார்.

https://youtu.be/8CsajowqXfg

Leave a Comment

Exit mobile version