பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ராஜு பாவணி குறித்து பேசியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.?

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரிதும் பிரபலம் அடைந்தவை. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது மேலும் ஒவ்வொரு பிக் பாஸ் சீசன்களிலுமே காதல் பேச்சு அடிபட்டு வரும்.

அந்த வகையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் முதலில் பாவணி மற்றும் அபிநய் காதலிக்கிறார்கள் என பேசப்பட்டது மேலும் இதனை முதலில் ராஜு தான் ஆரம்பித்து வைத்தார். பின்பு சில சர்ச்சைகளுக்கு பிறகு குறும்படம் போட்டுக் காண்பித்த பிறகு அதில் பாவணிக்கும் ராஜுக்கு இருந்த சந்தேகம் இருந்துள்ளது.

மேலும் ராஜு மற்றும் பாவணி இருவருக்குமே பிக்பாஸ் வீட்டில் செட்டே ஆகவில்லை. அந்த அளவிற்கு இருவரும் எதிர் எதிர் திசையிலே உள்ளனர். பின்பு அமீர் பாவணியை காதலிப்பதாக கூறி இருந்தார். ஆனால் பாவணி அதை ஏற்றுக்கொள்ளவில்லை அமீரிடம் பிரண்ட் ஆகவே பேசிவந்தார். மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்து போட்டியாளர்கள் பலரும் இன்டர்வியூ அல்லது ரசிகர்களிடம் நேரலையில் உரையாடல் போன்று செய்து வருகின்றனர்.

அந்த நிலையில் வெளியே வந்த சில நாட்களிலேயே பாவணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் ராஜுக்கு பாவணியை சுத்தமாக பிடிக்காது என்பது மக்கள் எல்லோருக்கும் தெரியும்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகும் ட்விட்டர் ஸ்பேசில் கலந்துகொண்ட ராஜுவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ராஜு பேசிக்கொண்டு இருந்தபோது தனக்கு பாவணியை பிடிக்காது என அதிரடியாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Leave a Comment