என்னதான் கிளாமரான காட்சியாக இருந்தாலும் சரி கதாநாயகி மீது கை விரல் கூட படாமல் பார்த்துக் கொள்ளும் பிரபல நடிகர்..!

பல்வேறு தடைகளை தாண்டி பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வந்தவர்தான் டி ராஜேந்தர். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மிக ஒழுக்கமான கண்ணியமான ஒரு நடிகர் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஏராளமான வார்த்தைகளை சொல்லலாம்.

அந்தவகையில் நமது நடிகர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி நெளிவு சுளிவு இல்லாமல் தன்னுடைய மனதில் பட்டதை சரியாக பேசும் திறன் கொண்டவர். மேலும் இவர் நடித்த காலகட்டத்தில் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்துள்ளார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஏனெனில் இவர் இயக்கும் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மிகவும் சிறப்பு அம்சம் உடையதாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களைக் கண்ணீர் சிந்தும் அளவிற்கு இருக்கும் ஆகையால் இவருடைய திரைப்படம் வெளிவந்து வெள்ளிவிழா தான் என பல முன்னணி நடிகர்களும் தங்களுடைய திரை படத்தை வெளியிடாமல் காட்டு வருவார்கள்.

மேலும் இவர் இசைஞானி இளையராஜா இசையமைத்து வந்தபோது கூட தன்னுடைய பாடலுக்கு என ஒரு தனி இசையை கொடுத்து தன்னைத்தானே தனித்துவபடுத்தி காட்டியவர். பொதுவாக டி ராஜேந்தர் திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடுவது ஒரு வழக்கமான செயல்தான்.

அந்த வகையில் தான் சொந்தமாக இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்பது எழுத்துக்களில் மட்டுமே தலைப்பு வைப்பார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய திரைப்படத்தில் எப்படிப்பட்ட கிளாமர் காட்சிகள் இருந்தாலும் சரி கதாநாயகிகள் மீது தன்னுடைய சுண்டு விரல் கூட படாமல் பார்த்துக் கொள்வார்.

ஆனால் இவருடைய திரைப்படத்திற்கு என்று கவர்ச்சி கொஞ்சம் அதிகம் ஏனெனில் இவருடைய குத்தாட்டத்திற்கு இயங்காத ரசிகர்களே கிடையாது அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் அழகு தேவதை என அனைவராலும் போற்றப்படும் அமலாவை முதன் முதலாக சினிமாவில் அறிமுகப்படுத்தியது நமது டி ராஜேந்திரன் தான்.

tr-2
tr-2

மேலும் ஆனந்த்பாபு, ராஜி, தியாகராஜன், தியாகு, நளினி, ரேணுகா, பப்லு, மும்தாஜ் என பல நடிகர்களை இவர்தான் அறிமுகப்படுத்தினார் அந்தவகையில் சந்திரலேகா படத்திற்கு பின் இவருடைய படங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.  மேலும் பெரிய அளவு செலவில் திரைப்படம் எடுத்து இருந்தாலும் இதுவரை எந்த ஒரு பைனான்சியர் இடம் இவர் கடன் வாங்கியது கிடையாது.

tr-1

அந்தவகையில் பாக்யராஜ் தாய் குளத்தை எப்படி கவர்ந்தார் அதேபோல்தான் டி ஆரும் மேலும் ஒரு தலை ராகத்தில் தன்னுடைய வெற்றிப் படியை வைத்த டிஆர் தங்கை கல்யாணி ஓடு முடித்துக்கொண்டார்.

Leave a Comment