சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.? நெருங்கிய நண்பருக்கு பச்ச துரோகம் செய்த பாலா.! அப்புறம் எப்படி விக்ரம்..

சேது திரைப்படத்தின் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் காட்டிய நடிகர் தான் விக்ரம்  பல நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது மேலும் சேது திரைப்படத்திற்கு முன்பு விக்ரம் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெறவில்லை இருப்பினும் தனது விடா முயற்சினால் சேது படத்தின் மூலம் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கினார்.

விக்ரம் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க விஜய் தான் அணுகினார்களாம் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து அவர் நடிக்கவில்லை மேலும் விஜய்க்கு முன்பு இன்னொரு முக்கியமான நடிகர் கதாநாயகனாக நடிக்க இருந்தது பற்றி தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர் பாலா அவரது முதல் படமான சேது வெளியான பொழுது படம் தோல்வி என நினைத்த நேரத்தில் படம் ஹிட் அடித்து விட்டது. பாலா இந்த கதையை எழுதும் பொழுது நடிகர் விக்னேஷ் அவர்களை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து அவரும் நடிக்க முடியாமல் போய்விட்டது அதனால் தான் விக்ரம் இந்த திரைப்படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

விக்னேஷ் அவர்கள் சின்னத்தம்பி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர் இதனை தொடர்ந்து கிழக்கு சீமையிலே, பசும்பொன், பொங்கலோ பொங்கல், அப்பு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இவரை ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு அப்பு திரைப்படம் இவருக்கு அமைந்தது சினிமாவில் பாலா வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாலாவும் விக்னேஷும் ஆரம்ப காலத்தில் ஒரே அறையில் தான் தங்கி இருந்தார்களாம்.

vikram
vikram

அப்பு திரைப்படத்திற்கு பின்பு விக்னேஷ் அவர்களை அதிகமான திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை ஆல் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நடிகர் விக்னேஷ் நடித்திருந்தால் படம் எப்படி ரசிகர்கள் இடையே  விமர்சனத்தை பெற்று இருக்கும் என்பது தெரியாது என கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.

Leave a Comment