IPL ஆக்ஷனில் கலந்து கொள்ளவிருக்கும் வார்னர் – எந்த அணிக்காக விளையாட போகிறார் தெரியுமா.? அவரே சொன்ன பதில்.

கிரிக்கெட்டில் அபாரமாக பந்தை அடித்து நொறுக்க கூடிய வீரர்கள் எப்பொழுதும் குறுகிய ஓவர் பார்மட்டில் ஜாம்பவான்களாக திகழ்கின்றனர் அந்தவகையில் ஐபிஎல் 20 ஓவர் பார்மட்டில் தொடர்ந்து தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வருபவர் டேவிட் வார்னர்.

இவர் சமீப காலமாக ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தவர்.  இந்த முறையும் ஹைதராபாத் அணிக்காக விளையாட அந்த அணியை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கழட்டிவிட்டு உள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இதனால் டேவிட் வார்னர் ஐபிஎல் மெகா ஏலம் ஜனவரி மாதம் தொடங்க இருப்பதால் அதில் கலந்துகொள்ள இருக்கிறார்.  ஐபிஎல் 15 வது சீசனில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டு அணிகளும் சிறந்த வீரர்களை பேசி வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டது ஆனால் இந்த இரண்டு அணிகளுமே டேவிட் வார்னரை வாங்க முன் வரவில்லை..

இத்தனை எடுத்து அவர் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். சும்மா வாகவே வார்னரை தட்டி தூக்க பல்வேறு அணிகள் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மெகா ஏலத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதால் மிகப்பெரிய ஒரு தொகைக்கு போக உள்ளார் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் எந்த அணிக்கு விளையாட போகிறார் என கேட்டனர் அதற்கு பதிலளித்த டேவிட் வார்னர் ஐபிஎல் ஆக்சன் இல் கலந்து கொள்வேன் எந்த அணியில் விளையாட போகிறேன் என்பது தெரியவில்லை என அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

Exit mobile version