திருமணமான ஒரு வாரத்திலேயே கணவனை பிறந்தது ஏன்? பல வருடங்களுக்குப் பிறகு உண்மையை உடைத்த vj ரம்யா.!

vj ramya : தொகுப்பாளினி ரம்யா சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார், இவர் சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக போரடிக்காமல் தொகுத்து வழங்குவார்.

இவர் தன்னுடைய தொழிலில் வெற்றி பெற்றாலும் வாழ்க்கையில் தோல்வி அடைந்தார், இவர் 2014 ஆம் ஆண்டு அபர்ஜித் ஜெயராமன் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது ஆனால் திருமணம் நடந்த ஓரிரு வாரங்களிலேயே இவர்கள் பிரிந்து விட்டார்கள்.

ரம்யா மற்றும் அவரின் கணவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது ரம்யா நடிக்க வந்தது தான் காரணம் எனவும் அதிலும் ஓ காதல் கண்மணி திரைப்படம் தான் முக்கிய காரணம் எனவும் பேச்சு அடிபட்டது, இந்த நிலையில்  இத்தனை நாட்களாக விளக்கம் தராமல் இருந்த ரம்யா தற்போது இது குறித்து பேசியுள்ளார் அவர் கூறியதாவது எங்கள் இருவருக்கும் காதல் திருமணம் கிடையாது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான்.

நடந்து முடிந்த சில தினங்களிலேயே எங்கள் இருவருக்கும் செட் ஆகாது என தெரிந்து விட்டது அதனால் ஒரு மனதாக பிரிந்து விடலாம் என முடிவெடுத்தோம், எனக்கு திருமணம் விவாகரத்து என இரண்டும் நடந்தது 2014 ஆம் ஆண்டு தான், ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது 2015 ஆம் ஆண்டு அப்படி இருக்கும் சமயத்தில் படத்தில் நடித்ததால் எனக்கு எப்படி விவாகரத்து நடந்திருக்கும் என கேள்வி எழுப்பினார் ரம்யா.

இதிலிருந்து தெரிகிறது இருவருக்கும் ஒத்து வரவில்லை அதனால் தான் விவாகரத்து பெற்றுக் கொண்டாராம் என கூறியுள்ளார் ரம்யா, ரம்யா தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Leave a Comment