இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் VJ மகேஸ்வரி – கண்ணீருடன் சொன்ன பதில்கள்.

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் வி. ஜே. மகேஸ்வரி சின்னத்திரையில் சிறப்பாக பயணித்தாலும் வெள்ளித்திரையில் முன்னேற வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. அடித்தளம் ஆரம்பத்திலேயே செய்தாராம் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவழியாக விஜே மகேஸ்வரி வெள்ளித்திரையில் சென்னை 6000028  படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் மகான், சாணி காயிதம் உள்ளிட்ட  பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் வருகிறார் ஆனால் படத்தை குறித்து எதுவும் அவர் இதுவரை வாய் திறக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் தற்போது தனது பயணத்தை ஆரம்பித்தாலும் இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொள்ள  முயற்சிக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை வி. ஜே. மகேஸ்வரி  பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது :  முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்ற பிறகு நான் இரண்டாவது கல்யாணம் பற்றி யோசிக்கவே இல்லை எனக்கு யார் மேலயும் நம்பிக்கை இல்லை என்னுடைய பையன், அம்மா என்னுடைய வேலை என்று நான் இருக்கிறேன்.

எனது குடும்பத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு துணையை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை இதனால் இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா இருக்காதா என்ற பயம் எனக்குள் இருக்கிறது அம்மாவைப் போலவே நானும் ஒரு சிங்கிள் மதர் ஆக இந்த உலகில் வாழ்கிறேன்.

எனவே நெகட்டிவாக விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் உடைத்து எறிந்துவிட்டு தைரியமாக ஓடிக்கொண்டிருக்கிறேன் தனியாக ஒரு குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம் ஆனால் வேறு வழியில்லை கண்ணீர் மல்க பேசினார்.

 

Leave a Comment