நெட்டிசங்களுக்கு எச்சரிக்கை விடுத்த VJ மகேஸ்வரி..! எல்லாத்துக்கும் காரணம் பிக்பாஸ் தான்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் அவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனும் பிரமாண்டமாக முடிவடைந்துள்ளது.

அந்த வகையில் இந்த சீசனில் வெற்றியாளராக அசின் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட விஜய் மகேஸ்வரி வெறும் 35 நாட்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அந்த வகையில் அவருடைய வெளியேற்றம் குறித்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதள பக்கத்தில் குவித்து வந்தார்கள் இந்நிலையில் இந்த பிக் பாஸ் வீட்டில் மகேஸ்வரி இருந்த பொழுது அசீம் உடன் ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே தான் இருந்தது இதை நாம் அனைவருமே பார்த்திருந்தோம்.

இதனைத் தொடர்ந்து அசீம் ஆதரவாளர்கள் மகேஸ்வரியை சமூக வலைதள பக்கத்தில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்வது மட்டுமில்லாமல் ஒவ்வொரு பதிவிற்கும் மிகவும் மோசமான கமெண்டுகளையும் பதிவு செய்து வந்தார்கள் மேலும் மகேஸ்வரி மட்டுமின்றி அவருடைய மகன் குறித்தும் மோசமான பதிவுகளை நெட்டிசங்கள்  போட ஆரம்பித்தார்கள்.

vj-maheshwari-01
vj-maheshwari-01

இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார் இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தன்னுடைய மகனை கட்டிப்பிடித்தார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது மட்டுமில்லாமல் என் மகன் ஒரு போராளியாக இருப்பதற்கு நன்றி என்று கூறியது மட்டும் இல்லாமல் ஆண்மை நிறைந்த இந்த உலகத்தை நீ பெண்களுக்கான சிறந்த உலகமாய் மாற்றப் போகிறாய் என்று நான் நம்புகிறேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் நீ அவ்வாறு இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் மேலும் உன்னை பாதுகாப்பேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல மோசமாக விமர்சனம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் புகார் கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment