VJ சித்ராவுக்கு நடந்தது உனக்கும் நடக்கலாம்.? பிரபல சீரியல் நடிகைக்கு அட்வைஸ் கொடுக்கும் ஸ்ரீநிதி.!

சமீபகாலமாக சீரியல் நடிகைகள் பலரும் ஒரு வயதை எட்டிய பின்பு தனக்கு நிகரான ஒரு நபரை காதலித்து அல்லது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்படி ஷபானா – ஆர்யன், ரேஷ்மா – முரளிதரன், சித்து – ஸ்ரேயா, போன்ற பல ஜோடிகளுக்கு திருமணம் செய்து கொண்டும் தனது கேரியரில் கவனம் செலுத்தியும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களைப் போல் தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த வீஜே சித்ராவும் ஹேம்நாத் என்பவரை பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் vj சித்ரா  ஹேம்நாத்துடன் இருக்கும் பொழுதே சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த செய்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் சித்ரா தவறான ஒரு நபரை தேர்வு செய்துள்ளார் எனவும் கூறி இருந்தனர். இப்பொழுது அதேபோல ஜீ தமிழ் சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கும் நடக்கலாம் என நடிகை ஸ்ரீநிதி சமீபத்திய இன்ஸ்டா லைவில் பேசி ஷாக் கொடுத்துள்ளார்.

ஸ்ரீநிதி கூறியது நக்ஷத்ரா என் வீட்டில்தான் இரண்டு வருடமாக இருந்தார் அப்போது கடந்த டிசம்பர் மாதம் நக்ஷத்ராவுக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது பின்பு அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் நக்ஷத்ரா இருந்தார். அந்த குடும்பத்தினர்கள் நக்ஷத்ராவை என்னை சந்திக்க விடுவதில்லை அதனால் நான் மிகவும் மன அழுத்தத்தில் கூட இருந்தேன்.

மேலும் அவர் நிச்சயம் செய்தவரின் குடும்பத்தினர்கள் என்னை தாக்கினார்கள் அது கூட எனக்கு பிரச்சனை இல்லை ஆனால் நக்ஷத்ரா வின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் எனவே நான் ஆசைப்படுகிறேன். ஆனால் vj சித்ரா தவறான ரிலேஷன்ஷிப்பை தேர்வு செய்ததால் தான் அவருக்கு மரணம் ஏற்பட்டது அதுபோல் நக்ஷத்ராவுக்கும் நடக்கலாம் அதனால்தான் நான் இப்போதே சொல்கிறேன் அவர் இறந்தால் கூட அவரது சாவுக்கு நான் செல்ல மாட்டேன் எனவும் ஸ்ரீநிதி கூறியுள்ளார்.

 

Leave a Comment