திடீரென ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட விவேக்.! பதட்டத்தில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் காமெடி நடிகராக அனைவரையும் சிரிக்க வைத்து அன்போடு ஜனனங்களின் கலைஞன் என்ற அங்கீகாரத்துடன் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மனதில் குடியேறி உள்ளவர் விவேக்.

தற்பொழுது கொரோனா தடுப்பூசி போட்ட இரண்டு நாட்களிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விவேக். இந்த தகவல் திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டால் சைடபெட் எபெக்ட் ஏதாவது வந்து விடுமோ என்று பயந்து கொண்டு தடுப்பூசி போடாமல் இருந்து வருகிறார்கள்.அந்தவகையில் விவேக்கிற்கு இப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பெரும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதால் தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயதான காலத்திலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்ததால் இப்படி ஆகிவிட்டதோ என்று ஒரு சிலர் கூறி வருகிறார்கள்.

vivek-5
vivek-5

இன்னும் சிலர் கொரோனா ஊசி போட்ட இரண்டு நாட்களிலேயே இப்படி ஒரு பிரச்சனை வந்ததால் இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியாக இருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் விவேக்கின் மகன் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

இந்த வருத்தத்தில் இருந்ததால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று விவேக்கின் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் எதனால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று தெளிவாக தெரியவில்லை.

Leave a Comment