சிவாஜி படப்பிடிப்பின் பொழுது ஒவ்வொரு நாளையும் என்னால் மறக்கவே முடியாது விவேக் மறைவு குறித்து ரஜினிஉருக்கமான பதிவு.!

சின்ன கலைவாணர் விவேக் மறைவு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். அவருக்கு  எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை நாலு முப்பத்தி ஐந்து மணிக்கு சிகிச்சை பலன் இன்றி திடீரென இறந்தார்.

இந்த தகவல் சினிமா ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் அரசியல் பிரமுகர்களையும் அதிர்ச்சியில் அழுத்தியது இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரும் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வந்தார்கள்.

அப்படி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியதாவது.சின்ன கலைவாணர் சமூக சேவகர் என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு வேதனையை தருகிறது. சிவாஜி படப்பிடிப்பில் பொழுது நடித்த ஒவ்வொரு நாளையும் என்னால் மறக்கவே முடியாது.

அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஆத்மா சாந்தி அடையட்டும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. விவேக் தன்னுடைய வாழ்நாளில் சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார் அந்தவகையில் இவர் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு உள்ளார்.

மேலும் இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்  ஒவ்வொரு ரசிகர்களும் விவேக்கிற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்றால் ஒரு மரக்கன்றுகளை நட்டு இரங்கல் தெரிவிக்கலாம் என சிம்பு தன்னுடைய கோரிக்கையில் கோரியுள்ளார் இதனை பல ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version