நைசா பேசி நெருங்கி வந்த இயக்குனர்..! வாய்ப்பில்லை ராஜா என நோஸ்கட் செய்த விஷால்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஷால் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் இரண்டாம் பாகம் போன்ற திரைப்படங்களை கைவசம் விஷால் வைத்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் துப்பறிவாளன் திரைப்படத்தில் விஷால் அவர்கள் நடிப்பது மட்டுமில்லாமல் தயாரித்தும் இயக்கியும் வருகிறார்.

ஆனால் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தினை இயக்குனர் மிஷ்கின் அவர்கள் தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதேபோல இரண்டாம் பாகத்தையும் முதல் முதலாக மிஷ்கின்தான் இயக்கி வந்தார் ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் பின்னர் விஷாலே இந்த திரைப்படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த திரைப்பட படப்பிடிப்பு பல வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்னும் இந்த திரைப்படம் முடிவடையாமல் நீண்டு கொண்டே இருக்கிறது ஆனால் இந்த திரைப்படத்தை விட்டு வெளியேறிய மிஸ்கின் அவர்கள் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டார் இந்நிலையில் மிஸ்கின் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது விஷாலை நான் தம்பி என்ற முறையில் தான் கேட்டேன் ஆனால் அவர் கோபித்துக் கொண்டார் என மிஸ்கின் கூறியுள்ளார்.

மேலும் எங்களுக்குள் வேறு எந்த பிரச்சனையும் கிடையாது என்று கூறியது மட்டும் இல்லாமல் விஷால் என்னை கூப்பிட்டால் கண்டிப்பாக நான் அவருடன் இணைந்து பணிபுரிவேன் என்று அவர் தெரிவித்துள்ளார் இன் நிலையில் விஷால் அதிரடியான பதில் ஒன்றை கொடுத்துள்ளார் அவர் கூறியது என்னவென்றால் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டார் அவரால் நான் பட்ட கஷ்டங்களை என்னால் மறக்கவே முடியாது ஆகையால் மீண்டும் நாங்கள் இருவரும் இணைவதற்கு வாய்ப்பே கிடையாது மேலும் அவமானங்களை மீண்டும் மீண்டும் சந்திக்க நான் விருப்பப்படவில்லை என நோஸ்க்கட்டு கொடுத்து விட்டார்.

Leave a Comment

Exit mobile version