பருத்திவீரனையே ஓவர் டெக் செய்தாரா விருமன்.! இதோ முழு விமர்சனம்.!

நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் விருமன் இந்த திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது இதற்கு முன் இந்த திரைப்படத்திலிருந்து இசை வெளியீட்டு விழா நடைபெற்றது அந்த இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு சினிமா பிரபலங்களும் பேசினார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ஷங்கரின் மகள் அறிமுகமாகியுள்ளார்.

இதற்கு முன் முத்தையா கார்த்திக் கூட்டணியில் வெளியாக்கிய கொம்பன் திரைப்படம் ரசிகர்களிடைய நல்ல விமர்சனங்களை பெற்றது இந்த நிலையில் மீண்டும் அதே கூட்டணியில் உருவாக்கிய விருமன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை

கார்த்தி கண் முன்னே அவரது தாயார் தீயில் எரிந்து இறந்து விடுகிறார் தன்னுடைய  தாயின் மரணத்திற்கு காரணம் தந்தை பிரகாஷ்ராஜ் என தன்னுடைய ஆழ்மனதில் பதிகிறது அதனால் கார்த்தி தன்னுடைய தந்தை மீது கொலை வெறியில் இருக்கிறார். அதனால் கார்த்தி தந்தையை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என  கொலை முயற்சியும் செய்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தன்னுடைய மருமகனின் வாழ்க்கை சீரழிந்து விடும் என எண்ணி தாய் மாமாவாக நடித்துள்ள ராஜ்கிரன் அழைத்து செல்கிறார் பிரகாஷ் ராஜை.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் கார்த்தி தன்னுடைய தந்தையை சந்திக்கிறார் ஆனால் கார்த்தி மனதில் அதே கோபம் இருப்பதை பிரகாஷ்ராஜ் உணர்கிறார் ஒருபுறம் இதெல்லாம் இருந்தாலும் மற்றொருபுறம் தனது மூன்று பிள்ளைகளின் வாழ்க்கைக்கு எதுவுமே செய்யாமல் தன்னை நம்பி மட்டுமே அவர்கள் பிழைக்க வேண்டும் என எண்ணும் பிரகாஷ் ராஜிடம் இருந்து தனது அண்ணன்கள் மூன்று பேரையும் எப்படி மீட்கிறார் என்பது படத்தின் கதை அது மட்டும் இல்லாமல் பிரகாஷ்ராஜ் மீது இருந்த கோபம் கார்த்திக்கு எப்படி தணிகிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.

கார்த்தியின் நடிப்பை பற்றி நாம் கூற வேண்டிய அவசியமே கிடையாது ஏனென்றால் பருத்திவீரன் திரைப்படத்திலேயே அவரது நடிப்பை பார்த்து அனைவரும் பிரமித்தார்கள் அந்த அளவு கிராமத்தக் கதையில் நடிக்க முடியுமா என பலரும் திகைத்தார்கள். அப்படிதான் விருமன் திரைப்படத்திலும் கார்த்தி நடிப்பு அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது ஆக்ஷன் சென்டிமென்ட் காதல் என அனைத்திலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

என்னதான் அறிமுக நாயகி என்று கூறினாலும் அதிதி சங்கரை யாராலும் அறிமுகநாயகி தான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என கூற முடியாது அந்த அளவு ஒரு முன்னணி நடிகை எப்படி நடிப்பாரோ அப்படிதான் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அடுத்ததாக ராஜ்கிரண் நடிப்பு பற்றி கூறவே தேவையில்லை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை கனகச்சிதமாக நடிப்பார் அந்த அளவு தாய் மாமன் கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார் சரண்யா பொன்வண்ணன் வடிவுக்கரசி என அனைவரின் நடிப்பும் அற்புதம்.

மேலும் சூரியின் நகைச்சுவை இந்த திரைப்படத்தில் கொஞ்சம் வொர்க் அவுட் ஆகி உள்ளது ஆர்கே சுரேஷ் சண்டைக்காக மட்டுமே படத்தில் வருகிறார். மேலும் மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், சிங்கம் புலி, மைனா நந்தினி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்தாலும் திரை திரைக்கதையில் கொஞ்சம் முத்தையா சொதப்பி உள்ளார் என்று கூற வேண்டும்.

என்றால் ஒரு சில வசனங்கள் சலிப்பை தட்டுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் அதேபோல் ஒளிப்பதிவும் மிரட்டி உள்ளார்கள். மொத்தத்தில் இந்த திரைப்படம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற திரைப்படமாக அமைந்துள்ளது.

Leave a Comment