விஐபி திரைபடத்தில் அப்பாஸ்க்கு டப்பிங் கொடுத்ததுக்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

பொதுவாக தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் பலருக்கும் தமிழ் பேசவே தெரியாது அப்படிப்பட்ட நிலையில் தமிழ் மொழி தெரிந்த நபர்கள் அல்லது ஹீரோக்கள் அவர்களுக்கு டப்பிங் பண்ணி கொடுப்பது வழக்கம் தான்.

அந்தவகையில் நடிகர் விக்ரம் அவர்கள் ஒரு படத்தில் 2 நபருக்கு ஒரே நேரத்தில் டப்பிங் செய்து கொடுத்துள்ளார் அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது 1997 ஆம் ஆண்டு வெளிவந்த விஐபி என்ற திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா,அப்பாஸ்,ரம்பா,சிம்ரன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

இத்திரைப்படத்தில் ஆள்மாறாட்ட கதையில் மிகவும் சிறப்பாக பிரபுதேவா நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் நமது நடிகர் விக்ரம் பிரபு தேவா மற்றும் அப்பாஸ் ஆகிய இருவருக்குமே இந்த திரைப்படத்தில் வெவ்வேறு குரலில் டப்பிங் செய்து கொடுத்துள்ளார். நடிகர் விக்ரம் சேது திரைப்படத்துக்கு பிறகு தான் திரையில் கதாநாயகனாக உதயம் அளித்தார் ஆனால் அதற்கு முன்பு டப்பிங்கில் தான்  இருந்தாராம்.

அந்த வகையில் விஐபி திரைப்படத்தில் அப்பாசுக்கு குரல் கொடுத்ததற்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா வெறும் 5000 ரூபாய்தான்  இவ்வாறு வெளிவந்த தகவல் அனைத்து சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாகி பரவி வருகிறது.

vip

ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தற்போது மிக பிரபலமான நடிகராக ஆன பின்னரும் எளிமையாக இருந்த ஒருவர் தான் விக்ரம் இவர் சமீபத்தில் தனது மகனுடன் சேர்ந்து ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Comment

Exit mobile version