பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துவரும் “வினுஷாதேவி” பகலில் ஷூட்டிங்.. இரவில் இப்படி ஒரு வேலையையும் செய்கிறார் – வெளிவந்த உண்மை.

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய சீரியல்கள் ஆகும். அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல் ஆகும்.மேலும் இந்த சீரியலில் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த சீரியலில் ஒருகட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன மேலும் கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள் ஒரு குழந்தை கண்ணம்மாவிடவும் மற்றொரு குழந்தை பாரதியிடமும் வளர்ந்து வருகின்றன.

கண்ணம்மா தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என இதுவரை நினைத்து வந்த நிலையில் சமீபத்தில் தான் ஹேமாவும் அவரது மகள் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த செய்தியை பாரதியிடம் தெரிவிக்க கண்ணம்மா பல திட்டங்களைப் போட்டு வந்தாலும் பாரதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இப்படி தற்போது சுவாரசியமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதலில் கண்ணம்மா.

கதாபாத்திரத்தில் ரோஷினி என்ற பிரபலம் நடித்து வந்தார் அவர் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார் மேலும் ரோஷினி சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சீரியலில் இருந்து விலகி மற்றொரு பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் இந்த நிலையில் ரோஷினிக்கு அடுத்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் தற்போது வினுஷாதேவி என்ற பிரபலம் நடித்து வருகிறார்.

இவரும் தற்போது இந்த சீரியலில் சிறப்பாக பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் இந்த பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகன் அருண் பிரசாத் நடிகை வினுஷா தேவி குறித்து ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது வினுஷாதேவி பகலில் ஷுட்டிங்கை முடித்து விட்டு இரவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Leave a Comment