நடிகர் வினு சக்கரவர்த்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த உசிலம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர். இவர் கன்னடத் திரைப்பட இயக்குனர் புட்டன்னா கனகல் என்பவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார் நடிகர் வினு சக்கரவர்த்தி. தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னையில்தான் முடித்திருந்தார், பின்பு காவல்துறையில் சேர்ந்தார். அதன் பிறகு தெற்கு ரயில்வேயில் உயர் அதிகாரியாக சிறிது காலம் பணியாற்றி வந்தார்.
அப்பொழுதைய காலகட்டத்தில் பலருக்கும் சினிமாவில் மோகம் இருந்தது போல் வினு சக்கரவர்த்தி அவர்களுக்கும் சினிமா மீது ஆசை வந்தது. அதனால் அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். விவேகானந்தா பிக்சர்ஸ் உரிமையாளர் திருப்பூர் மணி அவர்கள் தயாரித்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படத்தில் ஒரு கிராமத்து பையனாக சிறிய வேடத்தில் நடித்தார்.
இந்த திரைப்படத்தில் டைட்டிலில் அறிமுகம் வினு என்றுதான் தோன்றும். மேலும் வினு சக்கரவர்த்தி கதை திரைக்கதை வசனம் எழுதுவதில் இயக்குனர் புட்டன்னா கனகல் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் அவருக்கு கதை எழுத ஆர்வத்தை தூண்டியது புட்டன்னா கணகள் வினு சக்கரவர்த்திக்கு மட்டுமல்லாமல் பாரதிராஜாவுக்கும் குறுவாக இருந்தார். வினோ சக்கரவர்த்தி முதன்முறையாக 1976 ஆம் ஆண்டு கதை வசனம் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்திற்கு எழுதினார்.
ஆனால் இந்த திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படம் வெளியான பிறகு 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1980 ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படத்தை தயாரித்தவர் விவேகானந்தா பிக்சர்ஸ் திருப்பூர் மணி.இந்த படத்தை இயக்கியவர் கே விஜயன் அவர்கள். வினு சக்கரவர்த்தி தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.
அதேபோல் நடிகர் வினு சக்கரவர்த்தி இந்த திரைப்படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். சில்க் ஸ்மிதா எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதை ஒரு பேட்டியில் அவரே கூறியிருந்தார் அவர் கூறியதாவது என்னுடைய படத் தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாட ஒரு நடிகை வேண்டும் என பல நடிகைகளின் பெயர்களை கூறியிருந்தார் ஆனால் அதில் எந்த ஒரு உடன்பாடும் எனக்கு கிடையாது.
புதிதாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் ஒரு நாள் மாவரைக்கப் போனேன் அன்று மாவரைக்கும் மெஷின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன் அவர் சட்டென திரும்பி பார்க்கும் பொழுது அவருடைய கண்கள் என்னை காந்தம் போல் இழுத்தது. அப்பொழுது அவரைப் பற்றி விசாரித்தேன் அவர் பெயர் விஜயா மாலா அவர் ஆந்திராவை சேர்ந்தவர் அவருக்கு பெரிதாக தமிழ் பேச தெரியவில்லை.
தமிழ்நாட்டிற்கு வந்து 17 நாட்கள் ஆகிறது என கூறினார் பின்பு நடிக்கிறியா என்று கேட்டேன் அதற்கு அவர் எங்க ஊர் திருவிழாக்களில் நடனமாடியுள்ளேன் எனக் கூறினார் அதுமட்டுமில்லாமல் நடனம் ஆட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனவும் கூறினார். அதன் பிறகு எப்படி பேசுவது எப்படி நடிப்பது என அனைத்தையும் சொல்லிக் கொடுத்ததாக வினு சக்கரவர்த்தி கூறியுள்ளார் வெறும் 12 நாட்களில் எல்லாமே சில்க் ஸ்மிதா கற்றுக் கொண்டார் அப்படிதான் சில்க்ஸ்மிதாவை உருவாக்கினேன் என கூறினார்.
பின் சில்க் ஸ்மிதாவை கொண்டு போய் என்னுடைய இயக்குனர் மட்டும் தயாரிப்பாளரிடம் காண்பித்தேன் அவர்கள் எங்கிருந்து பிடித்த என கேட்க நடந்ததை கூறினேன் அப்பொழுது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இவர் கலக்க போகிறார் என கூறினார் அதேபோல் அவரும் கலக்கினார். ஒரு காலத்தில் சில்க் ஸ்மிதாவை ரசிக்காத ரசிகர்களே கிடையாது கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார்.
வினு சக்கரவர்த்தி தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ற்க்கு நெருக்கமாகவும் பிடித்த நடிகராகவும் இருந்துள்ளார் ஆனால் பல சினிமாக்களில் நடித்திருந்தாலும் எப்படியாவது ஒரு திரைப்படத்தை இயக்கி விட வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது ஆனால் அது கடைசி வரை நிறைவேறாமல் நிராசையாக போனது இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் மனைவி சித்ரா லட்சுமி கூறி இருந்தார்.