சினிமாவில் ஹீரோ, வில்லனாக நடித்து வரும் வினய்.! திரையுலகில் என்ட்ரி ஆவதற்கு முன்பாக என்ன வேலை செய்தார் தெரியுமா.? அவரே சொன்னது..

கோலமாவு கோகிலா என்ற சிறந்த படத்தைக் கொடுத்து அதன் மூலம் மக்கள் மனதில் நல்ல பெயரை சம்பாதித்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற 9ம் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட ரெடியாக இருக்கின்றனர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் அடுத்ததாக விஜயுடன் முதல்முறையாக கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். ரசிகர்கள் முதலில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வினய் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த போகப் போக வில்லன் ரோலில் அசத்துகிறார் அந்தவகையில் துப்பறிவாளன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தொடர்ந்து தற்போது டாக்டர் திரைப்படத்திலும் செம்மையாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் வினய் தனது வாழ்க்கைப் பயணம் குறித்து பேசி உள்ளார். திரைப்படத்தில் நெல்சன் – திலீப் குமார் இருவரும் இணைந்து மிக ஜாலியாக படப்பிடிப்பு நடத்தினார்கள் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது இப்பொழுது இவ்வளவு ஜாலியாக வேலை பார்க்கிறீர்கள் தொலைக்காட்சி பயணம் செய்த போது எப்படி இருந்தது என கேட்டேன்.

அதே போல நானும் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக விஸ்கி கம்பெனி, வங்கி போன்றவற்றில் பணி புரிவதாகவும் ஒரு அறைக்குள் உட்கார்ந்து எனக்கு பணி புரிய விருப்பம் இல்லை அந்த காரணத்தினால் தான் நான் ஒரு கட்டத்திற்கு மேல் நடிக்க வந்ததாக கூறினார்.

Leave a Comment

Exit mobile version