மகான் திரைப்படத்தில் மாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அட இவரா என உச்சுக் கொட்டும் ரசிகர்கள்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் வரத்து அதிகரித்துக் கொண்டே போகிறது அதுமட்டுமில்லாமல் இளம் இயக்குனர்கள் நல்ல கதை உள்ள திரைப்படத்தை கொடுத்து வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா பேட்ட ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் விக்ரம் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆகியோரை வைத்து சமீபத்தில் இயக்கிய திரைப்படம் தான் மகான். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று OTT இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அமேசான் பிரைம் இல் வெளியாகிய இந்த திரைப்படம் இன்னும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது படத்தைப் பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தில் நடித்த விக்ரம் மட்டும் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா ஆகியோர்களை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சத்தியவான் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பாபி சிம்கா.

இந்த கதாபாத்திரம் அவர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது இந்த நிலையில் இவர் நடித்த இந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது பிரபல நடிகர் மோகன் தான். ஆனால்ஒரு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது.

மைக் மோகன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார் அதன் பிறகு ஒரு சில காரணங்களால் நடிக்க மறுத்துவிட்டார் அதனால்தான் அடுத்ததாக பாபி சிம்ஹா அவர்களை படக்குழு அனுகியுள்ளது. பாபி சிம்ஹா நடித்த இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Leave a Comment