பூஜை முடிந்தது விஜய்சேதுபதியின் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம்..! நம்ம ஹீரோவுக்கு இப்படி ஒரு ரோலா..!

vijaysethupathi kaththuvaakkula rendu kadhal: வெகுநாட்களாக வெட்டியாக உட்கார்ந்து இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது மீண்டும் சினிமாவில் திரைப் படம் இயக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.

இந்த  திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்க உள்ளார் மேலும் கதாநாயகனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். மேலும் சமீபத்தில் இந்த  திரைப்படத்தின் பூஜை மிக சிறப்பாக முடிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த பூஜையில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் இல்லாமலே பூஜை நடத்தி முடித்து விட்டார்களாம். ஏனெனில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காட்சிகள் மட்டுமே தற்சமயம் படமாக்கப்படும் அதன் காரணமாக நடிகைகளை பூஜைக்கு அழைக்கவில்லையாம்.

இவ்வாறு விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோ லலித்குமார் தான் இந்த திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளாராம். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சமீபகாலமாக விஜய் சேதுபதி காதல் திரைப்படங்கள் நடிப்பதை விட்டுவிட்டார் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் காதல் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் ஆகையால் இந்த திரைப்படத்தை எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகரித்துவிட்டது.

பொதுவாக விஜய் சேதுபதி அனிருத்துடன் இணையும் பொழுது அந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்டாக அமையும் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பாடலை கேட்க ரசிகர்கள் மிக ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

vijaysethupathi
vijaysethupathi

Leave a Comment