ஹிரோவாக களமிறங்கும் விஜயின் மகன்.! போற போக்க பார்த்தா அப்பாவுக்கு டஃப் கொடுப்பாரு போல…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி மிக பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லியோ திரைப்படத்திலிருந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் எல்சியு-வில் இணைகிறது என்று தகவல் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் பட்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் அவர்களின் மகன் சஞ்சய் அவர்கள் படிப்பை முடித்து விட்டு தற்போது படங்களில் நடிகராக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது விஜயின் மகன் சஞ்சய் அவர்கள் தற்போது குறும்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஹீரோவாக தான் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் இவரை வைத்து படத்தை இயக்க பல இயக்குனர்கள் வருசைகட்டி நிற்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் பிரேமம் படத்தின் இயக்குனர் அவர்கள் சஞ்சய்க்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளாராம் அவர் ஒப்புக் கொண்டால் உடனே படத்தை எடுக்கலாம் என்று கூறியிருந்தார். அதேபோல தற்போது ஒரு தேசிய விருது வென்ற இயக்குனர் ஒருவர் சஞ்சயை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தேசிய விருது வென்ற அந்த இயக்குனர் வேற யாரும் இல்லை இயக்குனர் சுதா கொங்கரா தான் இவர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார் அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் விஜயின் மகன் சஞ்சய்க்காக ஒரு கதையை ரெடி செய்து வைத்திருக்கிறாராம் சஞ்சய் சம்மதம் தெரிவித்தால் உடனே படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறியுள்ளாராம். ஆனால் விஜய் அவர்கள் தனது மகன் நடிப்பதை விட இயக்குனராக இருப்பதுதான் மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.இது பொய்யான தகவலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment