தேவயானியை அணு அணுவாக டார்ச்சர் செய்த இயக்குனர்.! பல வருடங்கள் கழித்து உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகை…

சினிமா உலகத்தில் நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து பலரும் தைரியமாக பேசி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சூர்யா விஜய் நடிப்பில் வெளியாகிய பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு தங்கையாக நடித்த பிரபலம் அடைந்தவர் நடிகை விஜயலட்சுமி.

இவர் கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தமிழில் பூந்தோட்டம், கலகலப்பு 2, மிலிட்டரி, பாஸ் என்கின்ற பாஸ்கரன், தம்பி கோட்டை என பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். மிகவும் போல்டாக பேசும் விஜயலட்சுமி ஏதாவது கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில் விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பற்றி அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளார் அதில் அவர் கூறியதாவது இரண்டு வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் எனக்கு கால் செய்து இயக்குனர் களஞ்சியம் எனக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறி வருகிறார் என கூறினார்கள்.

எனக்கு திருமணம் ஆகிவிட்டால் நான் ஏன் சீமானுடன் போராட போகிறேன் பூந்தோட்டம் படத்தில் நான் களஞ்சியம் இயக்கத்தில் நடித்த பொழுது அப்படத்தில் தன்னுடன் நடித்த தேவயானியை அந்த திரைப்படத்தின் இயக்குனர் களஞ்சியம் தேவயானியை எப்படி டார்ச்சர் செய்தார் என்று நான் என் கண்ணாலையே பார்த்து உள்ளேன்.  அவரை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள் என பேசியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இப்பதான் சீமானை பற்றி சில சோர்ஸ்களையும்  அவர்களிடம் கூறியதாக விஜயலட்சுமி வீடியோவில் பேசியுள்ளார் அதுமட்டுமில்லாமல் இன்னும் பல விஷயங்களைப் பற்றி விஜயலட்சுமி பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜயலட்சுமி சீமான் சாருக்கு தெரியும் ஜெயிலில் உட்கார்ந்து 1 2 3 4 என எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது அவருக்காக மண் சோறு சாப்பிட்டு வெளியே வரவேண்டும் என இருந்தவர் தான் நான்.

ஆனால் அவர் என் வாழ்க்கையிலேயே மண்ணள்ளி போட்டுவிட்டு போயிட்டார் எனவும்  உங்களுக்கு நல்லது சொல்லிக் கொடுக்க நான் இருந்தேன் நானே போயிட்டேன். நான் இங்க கதறிக் கொண்டிருக்கும் பொழுது நீங்க ஜெயிக்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல் பெண் சாபம் என்பது தலைமுறை தலைமுறையாக கேட்கும் என ஆக்ரோஷமாக விஜயலட்சுமி பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment