விஜயகாந்த் செய்த செயலால் பொது இடத்தில் கண்கலங்கிய இயக்குனர் விக்ரமன் – வெளியே வந்த உண்மை தகவல்.!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன் தற்பொழுது சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் படங்களை இயக்கவில்லை என்றாலும் இவரது பழைய படங்கள் ரசிகர்களை இன்னும் கொண்டாட வைத்துள்ளது அந்த அளவிற்கு சூப்பரான படங்களை கொடுத்துள்ளார் விக்ரமன்.

இதுவரை சூரியவம்சம், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி, பூவே உனக்காக, கோகுலம், புதிய மன்னர்கள் என பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தமிழை தாண்டி இயக்குனர் விக்ரமன் பிற மொழி பக்கங்களிலும் தனது திறமையை காட்டி பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

இவர் அண்மையில் கேப்டன் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது கேப்டன் விஜயகாந்த் அரசியலில் களம் இறங்கி எதிர்கட்சி தலைவரானார் இதனை எடுத்து அவருக்கு வாழ்த்து சொல்ல அவரது கட்சி ஆபீஸுக்கு சென்றேன் விஜயகாந்த் உடன் இருப்பவர்களுக்கு என்னை நன்றாக தெரியும் அதனால் என்னை விஜயகாந்திடம் அழைத்து சென்றார்கள்.

அப்பொழுது விஜயகாந்த் கட்சி ஆபீஸில் மிகப்பெரிய ஒரு பிரஸ்மீட் நடந்தது விஜயகாந்த் அப்பொழுது  கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்தார். திடீரென அவர் என்னை பார்த்ததும் பிரஸ்மீட்டை நிறுத்திவிட்டு வாங்க சார் என கூப்பிட்டார். மேலும் விஜயகாந்த் பக்கத்தில் இருந்த ஒருவரை கூப்பிட்டு விக்ரமன் சாரை எனது ரூமில் தங்க வை அவர் தம்மடிப்பார் ஜன்னலை திறந்து விடு என கூறியுள்ளார்.

அத்தனை பேர் முன்பும் அவர் அப்படி பேசியது என்னை கண்கலங்க வைத்தது மேலும் அன்று என்னை அவர் அனைவரும் முன்னிலையிலும் இப்படி பேசியது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது என கூறினார். மேலும் விஜயகாந்த் ரொம்ப நல்ல மனிதர் என கூறினார் இயக்குனர் விக்ரமன்.

Leave a Comment