அதிரடி விஜயகாந்தின் கொரோனா ரிப்போர்ட் வெளியானது.!மருத்துவமனையில் இதற்காக தான் சிகிச்சை எடுத்துக்கொள்கிறாரா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவசரஅவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதுமட்டுமில்லாமல் தொண்டர்கள் பலரும் விஜயகாந்த் தலைவருக்கு என்ன ஆச்சு என பதட்டத்தில் இருந்தார்கள் அதனால் பெரும் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.

ரசிகர்கள் முதல் தொண்டர்கள் வரை விஜயகாந்த் உடல்நிலை என்ன ஆனது என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் தேமுதிக வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி தேமுதிக  தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் எனவும் அவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற இருக்கிறார் எனவும் கூறி உள்ளார்கள்.

மேலும் அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது மேலும் விஜயகாந்த் தலைவர் பற்றி எந்த ஒரு வதந்தியும் பரப்ப வேண்டாம், அச்சப்பட வேண்டாம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கிட்னி பிரச்சனை காரணமாக சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளார் அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் தொண்டர்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளார்கள்.

Leave a Comment