அஜித் பட இயக்குனருக்கே கட்டம் கட்டிய உதய நிதி… அதனால் தான் விஜய் படம் கை மீறி போச்சா…? ரசிகர்கள் கவலை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்தது. தமிழில் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற வாரிசு படம் தெலுங்கில் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தினை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் விஜய் படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் திரைப்படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாராம். உதயநிதி பிஸியாக இருந்ததால் இயக்குனர் மகிழ் திருமேனி ஒன்றரை வருடங்களாக காத்துள்ளார்.

அதன் பிறகு வேறு வழி இல்லாமல் அருண் விஜயை வைத்து தடம் படத்தை இயக்கினாராம். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்ததாக உதயநிதி கூறிய நிலையில் மேலும் பிறகு மகிழ் திருமேனிக்கு அட்வான்ஸ் கொடுத்ததாகவும் அந்த நேரத்தில் விஜய் மகிழ் திருமேனியை அழைத்து கதை கேட்டதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்து போக மகிழ் திருமேனி உதயநிதியிடம் விஜயை முடித்துவிட்டு வரலாமா எனக் கேட்க அதற்கு முடியாது என கூறிவிட்டாராம்.

எனவே உதயநிதியை முடித்துவிட்டு விஜய்யை வைத்து அடுத்த படத்தினை இயக்கலாமா என மகிழ்திருமேனி இருந்து வந்த நிலையில் தற்பொழுது விஜய் லியோ படத்தில் நடித்து வருவதால் அஜித்தின் ஏகே 62 படத்தினை இயக்க முடிவு செய்துள்ளாரார் என உதயநிதி கூறியுள்ளார். இவ்வாறு இவர் கூறுவதை பார்த்தால் லியோ படத்திற்கு பிறகு விஜய் மகிழ் திருமேனியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment