விஜய் நடித்த “நினைத்தேன் வந்தாய்” திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது.? இந்த பிரபல தெரியுமா.? பல வருடங்கள் கழித்து வெளிவந்த தகவல்.

சினிமா உலகைப் பொறுத்தவரை ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்வது வழக்கம் அந்த வகையில் டாப் நடிகர்கள் ஒரு சில காரணத்தினால் படத்தை தவற விடுவது உண்டு அதனால் இயக்குனர்களும் அந்த படத்தை  இளம் நடிகர்களுக்கு அந்த வாய்ப்பைத் தருவது உண்டு.

அதை சரியாக பயன்படுத்தி அந்த நடிகரும் முன்னேறுவார்கள் இது காலம் காலமாக சினிமா உலகில் நடந்து வருகிறது அந்த வகையில் 1988 ஆம் ஆண்டில் ஒரு சிறப்பான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

80, 90 காலகட்டங்களில் மிகச்சிறப்பாக ஜொலித்து வந்தவர் நடிகர் கார்த்தி இவரது நடிப்பில் அப்போதைய காலகட்டங்களில் வெளியான ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தான் அமைந்துள்ளது. மேலும் இயக்குனர்கள் அவரை கமிட் செய்ய அப்போதைய காலகட்டத்தில் வரிசை கட்டி நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் செல்வபாரதி இயக்கத்தில் உருவான நினைத்தேன் வந்தாய் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னமோ நடிகர் கார்த்திக் தான் ஆனால் கார்த்திக் அப்பொழுது கார்த்திக்கும், செல்வபாரதிக்கும் இடையே  கருத்துவேறுபாடு  ஏற்பட்டது மேலும்  சம்பள பிரச்சனை காரணமாக இதில் நடிக்காமல் மறுத்து விட்டார் பின் அவருக்கு பதிலாக விஜய் நடித்து ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தைத் தன் வரிசையில் நிறுத்திக்கொண்டார்.

படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தை உணர்ந்த கார்த்தி சம்பளத்தை கம்மியாக வாங்கியிருந்தாலும் இந்த திரைப்படத்தில் நடித்து இருக்கலாம்  என ஒரு கட்டத்தில் யோசித்தார் ஏனென்றால் படம் அந்த அளவிற்கு அருமையாக இருந்தது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment