விவாகரத்திற்கு பிறகு அபியுடன் ரொமன்ஸ் செய்ய ஆரம்பிக்கும் வெற்றி.! இதோ இன்றைய ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் பல தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் ஏராளமான சீரியல்கள் முன்னணி வகித்து வரும் நிலையில் டாப்பில் இருந்து வரும் தான் தென்றல் வந்து என்னை தொடும்.

இந்த சீரியலில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் உள்ளிட்ட இன்னும் பல சீரியல்களில் சின்னத்திரையின் தொடர்ந்து பல வருடங்களாக பணியாற்றி வரும் வினோத் பாபு, ஈரமான ரோஜாவே சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த பவித்ரா ஜனனி இருவரும் ஹீரோ ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர்.

இந்த சீரியல் மேலும் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் தான் பவித்ரா நடித்து வருகிறார். இதில் வினோத் பாபு வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அமெரிக்காவில் படித்து விட்டு ஊருக்கு மீண்ட வந்து கோவிலுக்கு செல்லும்போது ரவுடியாக நடித்து வரும் வெற்றி அபியின் கழுத்தில் தாலியைக் கட்ட அமெரிக்காவில் படித்து இருந்தாலும் நம்ப பாரம்பரியத்தை மறக்காதா அபி தாலியை கழட்டாமல் வெற்றி ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவருக்காக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அபி பல மாதங்கள் போராடியும் அவரால் வெற்றி மனதை மாற்ற முடியவில்லை எனவே தற்போது அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது தற்பொழுது வெற்றி தனது மாம பெண்ணை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த பிரச்சினையின் அவர் போலீசார் வெற்றியின் காலில் துப்பாக்கியால் சுட உடனே வெற்றி அபிக்கு போன் செய்து தான் இருக்கும் இடத்தை கூறிவிட்டு தன்னை அழைத்து செல்லுமாறு கூறி விடுகிறார். பிறகு அபியும் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றியின் காலில் இருந்த குண்டை எடுத்து விட்டு தனது வீட்டில் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்.

ஒரு பக்கம் வெற்றியை போலீசார்கள் தேடி வர வெற்றியும் கால் சரியானதும் அவள் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். பிறகு வெற்றியின் சிம் கார்ட் அபியிடம் இருப்பதால் அதனை மீண்டும் வாங்க வரும் பொழுது ஓடிப் பிடித்து விளையாடுவது போல் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

மேலும் வெற்றி மற்றும் அபி இருவரும் கட்டிப் பிடிக்கும்போது வெற்றியின் கண்களில் இருக்கும் காதல் தெரியவருகிறது. இவ்வாறு தற்பொழுது வெற்றி அபியை மீண்டும் ஏற்றுக்கொள்வாரா அல்லது தனது மாமன் மகளை திருமணம் செய்து கொள்வாரா என்பது விரைவில் தெரிய வருகிறது.

Leave a Comment