எனக்கு அவ புருஷன் தான் வேணும் என அடம்பிடிக்கும் ஜூலி.! சுடரிடம் உன்னுடைய அம்மா யார் என கேட்கும் வெற்றி.. உண்மையைத் தெரிந்துக் கொண்டு அபியை சேருவாரா.?

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும் இந்த சீரியலில் அபி கலெக்டராக இருந்து வரும் நிலையில் பல குற்றங்களுக்கு எதிராக போராடுகிறார்.

மேலும் குற்றவாளிகளும் இதனால் தண்டிக்கப்பட அனைவரும் அபிக்கு எதிரிகளாக மாறுகின்றனர் எனவே அபியை தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் அபியை கடத்திக்கொண்டு கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள் நடுக்கடலில் அபியை தூக்கி வீசி விட இவர்களை பின் தொடர்ந்த வெற்றி அபியை உயிருடன் காப்பாற்றி விடுகிறார்.

ஒரு வாரமாக கடலில் அபியும் வெற்றியும் இருந்து வர பிறகு சிலரின் உதவியுடன் மீண்டும் கரைக்கு வந்து சேர்கிறார்கள். இவ்வாறு வெற்றி மற்றும் தனது அம்மா இருவரும் மீண்டும் வந்த நிலையில் இதனால் சுடர் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார். வெற்றிக்கு சுடரின் அம்மா யார் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் வந்துள்ளது.

தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வெற்றியை பார்ப்பதற்காக சுடர் வருகிறார் இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்ள பிறகு பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு விஜியையும் அம்மானு தான் கூப்பிடுற அபியையும் அம்மானு தான் கூப்பிடற உண்மையில் உன்னுடைய அம்மா யாரு என கேட்க அதற்கு சுடர் அம்மாவை பற்றி சொல்ல முடியாது என கூறி விடுகிறார்.

இந்த நேரத்தில் கண்மணி நடந்து வர கீழே தவறி விழப் பார்க்கிறார் உடனே வெற்றி அவரை பிடித்து விடுகிறார் பிறகு விஜி கண்மணியை உள்ளே அழைத்து செல்ல அவரிடம் நான் முடிவு பண்ணிட்டேன் வெற்றியை தான் கல்யாணம் பண்ணிப்பேன் இதனை எவனாலும் எவளாலும் தடுத்து நிறுத்த முடியாது என சவால் விடுகிறார் இதோடு அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

Leave a Comment