தனக்கு திருமணமாகும் பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போஸ்டர் அடித்து அபியின் வீட்டின் முன் ஒட்டிய வெற்றி.! காண்டில் குடும்பத்தினர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏராளமான செய்வது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  அந்த வகையில் 350 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும்.  இந்த சீரியல் முழுக்க முழுக்க வித்தியாசமான கதையாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களில் நடித்து வரும் நடிகர் வினோத் பாபு ஹீரோவாகவும்,  ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமடைந்த பவித்ரா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

வெற்றி மற்றும் அபிக்கு டிவோர்ஸ் ஆன நிலையில் இருவரும் வேறு வேறு நபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.  அந்த வகையில் வெற்றிக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அபிக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர்கள் முடிவெடுத்து உள்ளார்கள்.  அதற்காக அபியின் அண்ணன் காலில் விழ,அப்பா துப்பாக்கியால் மிரட்ட தற்போது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாவர்.

மேலும் சக்தி எப்படியாவது அபியின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளைச் செய்து வருகிறார்.  இதன் காரணமாக வெற்றியிடம் சக்தி உதவி கேட்கிறார். இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வெற்றி மற்றும் அவர் திருமணம் செய்து கொள்ள மாமன் மகள் இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போஸ்டராக அடித்து ஊர் முழுவதும் கொட்டி உள்ளார்கள்.

அபியின் வீட்டு முன்பு ஏராளமான போஸ்டர்கள் ஒட்டி உள்ள நிலையில் அபியின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அபியை அழைத்து வந்த அந்த போஸ்டரை காண்பிக்கிறார்கள்.  அதனைப் பார்த்துவிட்டு அபி அழுகிறார் இதுதான் இன்றைய எபிசோடு இரு நடக்க இருக்கிறது.  மேலும் எப்படி இவர்களுடைய திருமணம் நடக்கும் என்பதை பார்ப்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment