துப்பாக்கியை தனது தலையில் வைத்துக்கொண்டு அபியை மிரட்டும் அப்பா.! அடுத்த முகூர்த்தத்தில் திருமணம்..

350 எபிசோடுகளை தாண்டி மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் தென்றல் வந்து என்னைத் தொடும்.  இந்த சீரியலில் தற்பொழுது வெற்றி மற்றும் அபி இருவருக்கும் விவாகரத்தாகி விட்டது.இந்நிலையில் தற்பொழுது வெற்றிக்கு தனது மாமன் மகள் ஆட்டோ ஓட்டுநருடன் திருமணம் நடக்க இருக்கிறது.

மேலும் வெற்றி இத்தனை நாட்களாக அரசியல்வாதி ஒருவருக்கு அடியாளாக பணியாற்றி வந்த நிலையில் தற்பொழுது அந்த அரசியல்வாதி வெற்றிக்கு பெட்ரோல் பங்க் ஒன்றை வைத்து தர உள்ளார்.  மேலும் வெற்றி மற்றும் அவருடைய மாமன் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.  இப்படிப்பட்ட நிலையில் வெற்றியின் காலில் போலீசார்கள் சுட்டதால் அபி அவரை காப்பாற்றி வந்த தனது வீட்டில் வைத்து பார்த்து வந்தார். சரியான பிறகு வெற்றியை அந்த வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வெற்றியை அபி வீட்டிற்கு அழைத்து வருவதை சிசிடிவி கேமராவின் மூலம் அவருடைய அண்ணன் மற்றும் அப்பா இருவரும் தெரிந்து.  எனவே அபியின் அப்பா துப்பாக்கியை தனது தலையில் வைத்துக்கொண்டு நீ திருமணம் செய்துகொள்வாயா மாட்டியா இனி நான் சுட்டு கொள்வேன் என்று மிரட்ட அப்பாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு திருமணம் செய்ய வைக்கிறேன் என்று கூறுகிறார்.

மேலும் அபியின் அப்பா உனக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் என்று கூறிவிடுகிறார். மேலும் அபி மற்றும் இவருடைய அத்தை மகன் சக்தி இருவருக்கும் திருமணமாக இருக்கிறது. இதுதான் என்று எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment