சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சிறுவர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும்.
இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஹீரோவாக வினோத் பாபு நடித்து வருகிறார். வினோத் பாபு ஏராளமான சீரியல்களில் நடித்து சின்னத்திரையின் முக்கிய நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைத் தொடர்ந்து ஹீரோயினாக பவித்ரா நடித்துவருகிறார் பவித்ரா இதற்கு முன்பு ஈரமான ரோஜாவே சீசன் ஒன்றில் நடித்து இருந்தார். இவர்களின் ஜோடி ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள நிலையில் தற்பொழுது சென்டிமென்டாக இருக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
அபி வெற்றியை காதலித்து வந்தாலும் வெற்றி பெரிதாக அபியை பற்றி நினைக்காத காரணத்தினால் தற்பொழுது இவருடைய மாமன் மகளை திருமணம் செய்ய உள்ளார். மேலும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.
இவர்களைத் தொடர்ந்து அபியின் அத்தைமகன் ஃபாரினில் இருந்து தற்பொழுது இந்தியா வந்துள்ளார். சக்திக்கு அபியை பிடித்துள்ள நிலையில் அபியிடம் ப்ரொபோஸ் செய்ய பல முயற்சிகளை செய்து வருகிறான். இப்படிப்பட்ட நிலையில் குடும்பத்திலுள்ளவர்களிடம் அபி மற்றும் சக்தி பழகுவதை பார்த்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் இருவரும் ரோட்டில் நடந்து கொண்டிருக்கும் பொழுது ரவுடிகள் வருகின்றார்கள். அப்பொழுது அந்த ரவுடிகளை சக்தி அடிக்கிறார். இதனால் அபி சக்திக்கு நன்றி கூற இதற்கெல்லாம் ஏன் நன்றி என சக்தி கூற இது சின்ன விஷயம் அல்ல ஒரு பெண்ணின் இடத்திலிருந்து பார்த்தால் தான் தெரியும் என அபி கூறுகிறார். எனிவே அபி கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறுகிறார் என்று சக்தி மகிழ்ச்சியாடைகிறார்.