அபிக்கு ப்ரொபோஸ் செய்த சக்தி.! வருத்தத்தில் வெற்றி…

சமீப காலங்களாக விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சுவாரசியமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் மிகவும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும்.  இந்த சீரியல் வித்தியாசமான கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் இந்தியாவிற்கு வரும் பெண் தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக ஆர்வமுடையவராகவும், மதிக்கத்தக்கவராகவும் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் ஊரில் சுற்றி வரும் ரவுடி செய்த காரியத்தை தட்டி கேட்டதால் அந்த அமெரிக்காவில் படித்து வந்த பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டி விடுகிறார்.

அந்த அமெரிக்காவில் படித்த பின்தான் அபி ஈரமான ரோஜாவே சீரியல் நடித்து வந்த பவித்ரா அபி கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ரவுடியாக ஹீரோ கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் ஏராளமான சீரியலில் நடித்துள்ள வினோத் பாபு வெற்றி கேரக்டரில் நடித்து வருகிறார்.

வெற்றிக்கு அபியை பிடிக்கவில்லை என்றாலும் அபி வெற்றியின் வீட்டில் தான் இருந்து வந்தார் ஆனால் தற்பொழுது இவர்களுக்கிடையே விவாகரத்தாகி விட்டது.  தற்பொழுது அபி தனது வீட்டில் இருந்துவரும் நிலையில் வெற்றி தனது அத்தை மகளை திருமணம் செய்ய இருக்கிறார்.

மேலும் அபியிடம் சக்தி தனது காதலை வெளிப்படுத்துவதற்காக பார்கிற்கு அழைத்து செல்கிறார். அங்கு போனதும் அபி மிகவும் அமைதியாக சோகமாக இருந்ததால் அவரை எப்படியாவது சிரிக்க வைத்து விட வேண்டும் என சக்தி மிக்கிமோஸ் போன்றவற்றை காண்பித்து அபியை சிரிக்க வைக்கிறார்.

பிறகு சக்தி  ப்ரொபோஸ் செய்ய போகும் நேரத்தில் அபிக்கு போன் வந்துவிடுகிறது. எனவே அவரால் தனது காதலை கூற முடியவில்லை.  பிறகு வீட்டில் இருப்பவர்கள் சக்திக்கும் அபிக்கும் பொருத்தம் நல்லா இருக்கிறது என பேசி வருகிறார்கள்.  இதனைத் தொடர்ந்து வெற்றியின் வீட்டிலும் சக்தி மற்றும் அபிக்கு திருமணமாக இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்.  உடனே கமலா இதற்கு மேல் இந்த என் பையனின் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வராது என மகிழ்ச்சிடைகிறாள் ஆனால் வெற்றி மிகவும் வருத்தத்தில் இருந்த வருகிறார்.

Leave a Comment