சூர்யாவின் ஆறு திரைப்படத்தை அப்படியே அட்டை காப்பி அடித்திருக்கும் விஜய் டிவி சீரியல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து டி ஆர் பி யில் சூப்பர் ஹிட் சீரியலாக வளர்ந்து வருகிறது. இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வந்ததால் தற்போது விஜய் டெலிவிஷனில் விருது கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் வெளித்தோற்றத்தில் ரவுடியாக இருந்தாலும் நல்லவனாக இருக்கும் வெற்றி ஒரு சில காரணங்களால் அபியை தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அபி, வெற்றி வீட்டில் தங்கி வருகிறாா். அபியை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு வெற்றி பல முயற்சிகளை செய்து வருகிறார். வெற்றி வீட்டிலுள்ள குடும்பத்தினர்கள் அனைவரின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அபி.

இந்நிலையில் அபியை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதற்கு காத்துக் கொண்டிருக்கும் வெற்றிக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அபியின் அப்பாவை ரவுடிகள் கடத்திவிட அபி வெற்றியிடம் உதவி கேட்டு வருகிறார். அதற்கு வெற்றி உங்க அப்பாவை காப்பாற்றினால் இந்த வீட்டை விட்டு வெளியில் போக வேண்டும் என்று கூற அதற்கு அபியும் சம்மதித்து வருகிறார். அப்போது வெற்றி அபியின் அப்பாவை காப்பாற்றிவிட வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் அபி.

இதை தொடர்ந்து வெற்றிக்கு திருமணம் செய்துவைக்க வெற்றியின் அம்மாமுடிவு எடுக்கிறார். அப்போது வெற்றியின் அத்தையிடம் வெற்றிக்குப் பெண் கேட்கிறார். அதற்கு வெற்றியின் அத்தையும் ரவுடிசத்தை விட்டு வீட்டு மாப்பிளையாக வந்தால் பெண் தருவதாக கூறுகிறார். இதற்கு வெற்றியின் அம்மா சம்மதித்து வருகிறார்.

இதில் வெற்றியின் திருமணம் நடக்குமா? இல்லை அபியும் வெற்றியும் ஒன்று சேர்வார்களா? என்று வெற்றியின் திருமணத்திற்கு அபி வீட்டில என்ன சொல்லுவார்கள்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றியின் அம்மா செய்யும் செயல்கள் ரசிகர்களுக்கு எரிச்சலைத் தருகிறது. மேலும் இந்த சீரியல் படத்தின் டைட்டிலை வைக்கவில்லை என்றாலும் சூர்யா நடித்திருக்கும் ஆறு படத்தின் கதையுடன் ஒத்துப் போகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

thenral vanthai yennai thotum
thenral vanthai yennai thotum

இதனைத் தொடர்ந்து ஆறு படத்தை தத்ருபமாக காட்டிவருகிறது. தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியல் அபி மற்றும் வெற்றி சந்தித்த போது இவருக்கும் இடையே உணர்வு ஏற்படுகிறது. ஆறு திரைப்படத்திலும் இருவர்களும் ஒரு கல்யாணத்தில் சந்தித்தபோது அந்த உணர்வு ஏற்படுகிறது. இதில் தெளிவாக தெரிகிறது. டைட்டில் தான் வேற கதை ஒன்றாக தான் ஒத்துப்போகிறது என்று ரசிகர்கள் கலாய்ச்சி வருகிறார்கள்.

Leave a Comment